» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செல்போன் பார்த்ததைப் பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை!

புதன் 12, ஆகஸ்ட் 2026 5:58:05 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே செல்போன் பார்த்ததைப் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருப்புளியங்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மகள் இலக்கிய ஸ்ரீநிதி (22). இவர் நாசரேத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். மாணவி ஸ்ரீநிதி வீட்டு வேலைகளைச் செய்யாமல் தொடர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த ஸ்ரீநிதி, சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை உடனடியாக மீட்டுச் சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஸ்ரீநிதி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory