» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)
அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை 50 சதவீதம் வரை பெரிதாக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசு செய்தி வெளியீடுகள் மற்றும் நேரடி ஒளிபரப்புகளின் போது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்படும் சைகை மொழிபெயர்ப்பாளரின் வீடியோ திரையின் அளவை பெரிதாக்க வேண்டும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கே.ஜெகதீஸ்வரியிடம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் எம். மெய்கண்டன் கோரிக்கை மனு அளித்துள்ளார். அவர் மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்: தமிழ்நாடு அரசு மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை (DIPR) சார்பில் முக்கிய அரசு செய்திகள், அறிவிப்புகள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளின் போது சைகை மொழிபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்துவதற்கு முதற்கண் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நேரடி ஒளிபரப்பு மற்றும் செய்தி வீடியோக்களில் சைகை மொழிபெயர்ப்பாளர் தோன்றும் திரையின் அளவு மிகச் சிறியதாக இருப்பதால், தூரத்தில் இருந்து பார்க்கும் போது அவர்களின் கை மற்றும் முக பாவனைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை.
காது கேளாத மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதி செய்யும் வகையில், இனிவரும் காலங்களில் அரசு செய்தி வெளியீடுகளின் போது சைகை மொழிபெயர்ப்பாளரின் வீடியோ அளவைக் குறைந்தது திரையின் அளவை 30 முதல் 50% வரை கணிசமாகப் பெரியதாக அமைத்து ஒளிபரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கோரிக்கை மனு, சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை அமைச்சர், செய்தி மக்கள் தொடர்புத்துறை (DIPR) இயக்குநர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை பணிகளை ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் களஆய்வு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:54:51 PM (IST)

அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா மாட்டு வண்டி எல்லைப் பந்தயம்: சீறிப் பாய்ந்த காளைகள்!!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:19:43 AM (IST)

தூத்துக்குடியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு - ஆக.21ல் நடைபெறும் என அறிவிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:15:46 AM (IST)







