» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை பணிகளை ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் களஆய்வு!

வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:54:51 PM (IST)

CollectorInspec.jpg

தூத்துக்குடி மாவட்ட நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு குளங்கள், கால்வாய்கள் மற்றும் அணைக்கட்டு பகுதிகளை மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் இன்று நேரில் சென்று பார்வையிட்டுப் களஆய்வு மேற்கொண்டார்.

நாட்டார் குளம், செய்தூங்கநல்லூர் தூதிகுழி குளம், வெள்ளூர் குளம், வெள்ளமடம் தென்கரை குளம், முதலைமொழி குளம் மற்றும் கீழப்புதுக்குளம் கிராமத்தில் உள்ள குளம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார்.

செய்தூங்கநல்லூர், கால்வாய் கிராமம் மற்றும் வெள்ளமடம் கிராமங்கள் வழியாகச் செல்லும் மருதூர் மேலக்கால்வாய்/கீழக்கால்வாய் பகுதிகளைப் பார்வையிட்டுத் தூர்வாரும் பணிகள் மற்றும் நீர்வரத்து குறித்து ஆய்வு செய்தார்.

சுப்பராயபுரம் அணைக்கட்டுப் பகுதியை ஆய்வு செய்த ஆட்சியர், தொடர்ந்து சாத்தான்குளம் கரையடி சுடலைமாடசாமி கோவில் அருகில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைப்பது தொடர்பாக களஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது நீர்வளத்துறை அதிகாரிகளுடன் உடனிருந்து, நீர்நிலைகளைப் பராமரித்தல் மற்றும் பாசன வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory