» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே க.சுப்பிரமணியபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மகாசக்தி, ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முனியசாமி திருக்கோவிலின் 18-ஆம் ஆண்டு ஆடி கொடை விழா விமர்சையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி, தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் கிடா வெட்டி, பொங்கலிட்டுப் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.ஆடி கொடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த முளைப்பாரிகளைச் சுற்றிப் பெண்கள் கும்மியடித்துப் பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, ஆண்களும் பெண்களும் இணைந்து பலவகையான முளைப்பாரிகளை ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எட்டையாபுரம் சாலையிலிருந்து பைப்பாற்றுக்கு எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்துத் தங்களது நேர்த்திக்கடனைச் சிறப்பாக நிறைவு செய்தனர். இவ்விழாவில் க.சுப்பிரமணியபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை பணிகளை ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் களஆய்வு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:54:51 PM (IST)

அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா மாட்டு வண்டி எல்லைப் பந்தயம்: சீறிப் பாய்ந்த காளைகள்!!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:19:43 AM (IST)

தூத்துக்குடியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு - ஆக.21ல் நடைபெறும் என அறிவிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:15:46 AM (IST)







