» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!

வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)

Mulaippariamman.jpg

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே க.சுப்பிரமணியபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மகாசக்தி, ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முனியசாமி திருக்கோவிலின் 18-ஆம் ஆண்டு ஆடி கொடை விழா விமர்சையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி, தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் கிடா வெட்டி, பொங்கலிட்டுப் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.ஆடி கொடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த முளைப்பாரிகளைச் சுற்றிப் பெண்கள் கும்மியடித்துப் பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து, ஆண்களும் பெண்களும் இணைந்து பலவகையான முளைப்பாரிகளை ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எட்டையாபுரம் சாலையிலிருந்து பைப்பாற்றுக்கு எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்துத் தங்களது நேர்த்திக்கடனைச் சிறப்பாக நிறைவு செய்தனர். இவ்விழாவில் க.சுப்பிரமணியபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory