» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் நள்ளிரவில் விவசாயி ஒருவர் டைல்ஸ் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (47). இவரது மனைவி பாரதி; இவர்களுக்கு 2 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். ஞானப்பிரகாசம் தற்போது புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளி மெயின் ரோட்டில் உள்ள டெய்லர் கடைத் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து, தனது குடும்பத்துடன் தங்கி விவசாயம் செய்து வந்தார்.
நேற்று நள்ளிரவில் ஞானப்பிரகாசத்தின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது அந்த நபரிடம் சத்தம்போட்டுப் பேசியவாறே வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் மீண்டும் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை. இந்நிலையில், இன்று காலை வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் ஞானப்பிரகாசம் தலையில் டைல்ஸ் கல்லால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.
தகவல் அறிந்து எஸ்பி சிவபிரசாத், ரூரல் டிஎஸ்பி சுதீர், புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் குமாரவேல்பாண்டியன், எஸ்ஐ முத்துசெல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டுச் சோதனை நடத்தப்பட்டதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஞானப்பிரகாசத்தின் செல்போனில் பேசிய நபர் யார்? முன்விரோதம் அல்லது வேறு ஏதேனும் காரணம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா? எனப் பல்வேறு கோணங்களில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை பணிகளை ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் களஆய்வு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:54:51 PM (IST)

அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா மாட்டு வண்டி எல்லைப் பந்தயம்: சீறிப் பாய்ந்த காளைகள்!!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:19:43 AM (IST)

தூத்துக்குடியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு - ஆக.21ல் நடைபெறும் என அறிவிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:15:46 AM (IST)







