» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா

வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)



தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் குலபதி ஏ.பி.சி. வீரபாகு 44-ஆம் ஆண்டு நினைவு விழா மற்றும் வ.உ.சி. இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றன. 

இன்று காலையில் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டத்தில், குலபதி ஏ.பி.சி. வீரபாகு திருவுருவப் படத்திற்குச் பள்ளி ஆசிரியப் பெருமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  தொடர்ந்து, குறுவட்ட அளவிலான கபடி, வளையப்பந்து மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற 22 மாணவ, மாணவிகளுக்குப் பள்ளியின் செயலர்  ஏ.பி.சி.வி. சண்முகம் அவர்களின் சார்பில், முதுகலை ஆசிரியர் ஐசையா கைக்கடிகாரங்களைப் பரிசாக வழங்கிப் பாராட்டினார். 

மாலையில் நடைபெற்ற விழாவிற்குப் பேச்சாளரும், வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளரும், சமூக ஆர்வலருமான ஜெ. காமாட்சி தலைமையேற்று, குலபதி ஏ.பி.சி. வீரபாகு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் சிறப்புரையாற்றினார். நாவலாசிரியரும், அகில இந்திய வானொலி நிலைய அறிவிப்பாளருமான . கண்ணம்மாள் ஸ்ரீதர்  "இலக்கிய சிந்தனைகள்" என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றி, வ.உ.சி. இலக்கிய மன்றத்தைத் தொடங்கி வைத்தார். 

விழாவில் பள்ளித் தலைமையாசிரியர்  தட்சிணாமூர்த்தி வரவேற்புரையாற்றினார்; முதுகலை ஆசிரியை . மரகதவள்ளி நன்றியுரையாற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இவ்விழாவினைப் பட்டதாரி ஆசிரியை அந்தோணி ஆஸ்மின் தொகுத்து வழங்கினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory