» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் இளம் தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கு

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 9:38:16 PM (IST)

ssdmsemini.jpg

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மையம் சார்பில் இளம் தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கு கல்லூரி கூட்டரங்கில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் செல்வம்,கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர் திவ்யா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினரை பேராசிரியர் ஸ்ருதி அறிமுகம் செய்து வைத்தார்

இதில் பாம்பே இடிஎப் நியூக்ளியர் ப்ராஜெக்ட் நிர்வாக இயக்குனர் முனைவர் காளிராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பது குறித்து சிறப்புரையாற்றினார்இதில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி பேராசிரியர் கிறிஸ்டி கேத்தலின் ராணி நன்றி கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory