» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நில அளவையர் மீது தாக்குதல்: அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:17:43 PM (IST)
நில அளவை பணிக்குச் சென்ற அரசு ஊழியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGEA) சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் அரசங்குளம் கிராமத்தில் உள்ள கந்தையா மற்றும் லட்சுமணன் ஆகியோருக்கிடையே இடப்பிரச்சினை நிலவி வந்தது. இது தொடர்பாக நில அளவை பணிக்காகச் சென்ற குறுவட்ட அளவையர் மகேஷ் என்பவரை, லட்சுமணன் தரப்பினர் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தினர். காயமடைந்த அளவையர் மகேஷ் தற்போது கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குறுவட்ட அளவையர் மகேஷைத் தாக்கிய நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். நில அளவையர் மீது புனையப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாலைநடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முருகன் மற்றும் தாசில்தார் சுவாமிநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







