» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவர் மாயம் : தேடும் பணித் தீவிரம்!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:52:58 PM (IST)

தருவைகுளத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மாயமான தூத்துக்குடி மீனவரை கடலோரக் காவல் படையினர் மற்றும் மீனவர்கள் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சேர்ந்த அந்தோணியார் பிச்சை என்பவருக்குச் சொந்தமான செவுள்வலை விசைப்படகில், நேற்று இரவு 9.00 மணியளவில் 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடலில் சென்று கொண்டிருந்தபோது, படகில் இருந்த தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த பனிமயராஜா என்பவரைக் காணவில்லை என்பதை சக மீனவர்கள் இரவு 10.30 மணியளவில் கண்டறிந்தனர்.

இதுகுறித்து உடனடியாக விசைப்படகு உரிமையாளருக்கும், கடலோரக் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாயமான மீனவர் பனிமயராஜாவைத் தேடும் பணியில் தற்போது 3 விசைப்படகுகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory