» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 12:48:23 PM (IST)

திருச்செந்தூர் இரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ஜகாங்கீர் என்பவரின் மகன் சம்சுதீன் (23). இவர் திருச்செந்தூர் இரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் புதிய நடைமேடை அமைக்கும் பணியில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்த சம்சுதீன், இரும்பு கம்பிகளை வெட்டும் பணியை மேற்கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த திருச்செந்தூர் காவல்துறையினர், சம்சுதீனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory