» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தென் மண்டல கூடைப்பந்து போட்டி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 11:39:53 AM (IST)


VOcPortBasketball.jpg

தேனியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் தூத்துக்குடி வஉசி துறைமுக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது

தமிழ்நாடு மாநில கூடைப்பந்து சம்மேளனம் சார்பில் தென் மண்டல சீனியர் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மூன்று நாட்கள் நடந்தது. இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 90 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், தேனி மாவட்ட அணியும் தூத்துக்குடி வஉசி துறைமுக அணியும் மோதின. 

இந்தப் போட்டியில் 93-47 என்ற புள்ளிக் கணக்கில் வஉசி துறைமுக அணிவெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தேனி எல்.எஸ் மில் அதிபர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெண்ண அணிக்கு கோப்பையை வழங்கினார். 

சாம்பியன் பட்டம் வென்ற அணி வீரர்கள், மற்றும்பயிற்சியாளரும் துறைமுக சபை உறுப்பினருமான சத்யா ஆகியோருக்கு வஉசி துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோகித், துணைத் தலைவர் ராஜேஷ் சவுந்தர்ராஜன் ஆகியோர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory