» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மழைநீர் வடிகால்களை ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 10:21:50 AM (IST)

DrainageCollector.jpg

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைக்காலங்களில் தேங்கும் மழைநீரைச் சீரான முறையில் வெளியேற்றுவது தொடர்பாக, மழைநீர் வடிகால் கால்வாய்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா ஐ.ஏ.எஸ். முன்னிலையில் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலத்தில் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கும் மழைநீரைச் விரைவாக வெளியேற்றுவது குறித்து வடக்கு கடற்கரை சாலை, தெற்கு கடற்கரை சாலை, எஸ்.ஆர்.எம். சாலை, ஜார்ஜ் சாலை, காமராஜ் கல்லூரி சாலை, சிவந்தாகுளம் சாலை, பிரையன்ட் நகர் 12-வது தெரு சாலை, ஸ்டேட் வங்கி காலனி உள்ளிட்ட பின்வரும் முக்கியச் சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களை ஆட்சியர் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து, வடக்கு மண்டல வளாகத்தில் மழைக்காலங்களில் மாநகரப் பகுதிகளில் தேங்கும் மழைநீரைச் சீரான முறையில் வெளியேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்புகளின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின் போது மாநகராட்சி பொறியாளர் திலகம், மாநகர நல அலுவலர் மருத்துவர் கணேஷ், சுகாதார அலுவலர் ஹரி கணேஷ் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory