» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் - 601 கோரிக்கை மனுக்கள்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:48:47 PM (IST)
தூத்துக்குடியில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 601 மனுக்கள் பெறப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்களின்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் இதர பல்வேறு மனுக்கள் என 550 மனுக்களும், மூத்தகுடிமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்யேக இடத்தில் மூத்த குடிமக்களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 10 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களிடமிருந்து 41 மனுக்கள் என மொத்தம் 601 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, அலிம்கோ நிறுவனத்தின் சார்பில் 01 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ. 9000/- மதிப்பீட்டில் காதொலிக் கருவியும், 01 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ. 8000/- மதிப்பீட்டில் மூன்று சக்கர நாற்காலியினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பின்னர், சிறு சேமிப்புத் துறையின் கீழ் 2024 – 2025 ஆம் நிதியாண்டில் மாவட்ட அளவில் சிறு சேமிப்பு வசூலில் சாதனை புரிந்த நிலை முகவர்கள் மற்றும் மகளிர் முகவர்களுக்கு முதல் பரிசு ரூ. 3000/-க்கான தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் கேடயமும், இரண்டாம் பரிசு ரூ. 2000/-க்கான தேசிய சேமிப்பு பத்திரமும், மூன்றாம் பரிசு ரூ. 1000/-க்கான தேசிய சேமிப்பு பத்திரங்களையும், ஊராட்சி ஒன்றியம், நகர்ப்புற அளவில் சிறுசேமிப்பு வசூல் சாதனை புரிந்த மகளிர் முகவர்களுக்கு ரூ. 1000/-க்கான தேசிய சேமிப்பு பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் / தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) விஜயா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) நாகராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் காமாட்சி மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







