» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கருகும் நிலையிலுள்ள பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் கோரிக்கை -ஆக.14ல் சாலை மறியல் எச்சரிக்கை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:22:02 PM (IST)

நீரின்றி கருகும் நிலையிலுள்ள வாழை மற்றும் வெற்றிலைப் பயிர்களைக் காப்பாற்ற ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகாலில் உடனடியாகத் தண்ணீர் திறக்கக் கோரி 20 கிராம விவசாயிகள் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன வாய்க்கால் மூலம் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், வாழவல்லான் கீழூர், வாழவல்லான் மேலூர், தெற்கு வாழவல்லான், ஆறுமுகமங்களம், கொட்டாரகுறிச்சி, செல்வநாயகபுரம், கணபதி சமுத்திரம், அண்ணாநகர், அரசன்குளம், கொற்கை, கொற்கை கனி, அக்கசாலை, செந்நெல்மாநகர், கொற்கை மணலூர், லட்சுமிபுரம், அரியபுரம், அதிசயபுரம், உமரிக்காடு, முக்காணி, ஆடிஷயூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் வாழை மற்றும் வெற்றிலை விவசாயம் நடைபெற்று வருகிறது.
தற்போது பல லட்சம் வாழை மரங்கள் குலை தள்ளும் பருவத்தில் உள்ளன. இச்சூழலில் பாசனத்திற்கு நீரின்றிப் பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், பழங்களின் தரம் குறைந்து மகசூல் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் வடகாலில் இருந்து நாளை முதல் தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு நாளொன்றுக்குச் சுமார் 500 கன அடி தண்ணீர் திறந்துவிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும். தண்ணீர் திறக்கப்படாத பட்சத்தில், வரும் ஆகஸ்ட் 14 அன்று முக்காணி ரவுண்டானாவில் 20 ஊர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பிரம்மாண்ட சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







