» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்!

திங்கள் 10, ஆகஸ்ட் 2026 3:46:29 PM (IST)



தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவ, மாணவியருக்கு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் சார்பில் இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவ, மாணவியருக்குக் கடந்த கல்வியாண்டைப் போலவே, 2026-2027 ஆம் கல்வி ஆண்டிலும் இலவச சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குப் பள்ளித் தலைமை ஆசிரியை எமெல்டா லெவன்சியா ஹெப்சிபா தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு மாணவர்களுக்குச் சீருடைகளை வழங்கினர். இதில் சங்கத் தலைவர் பொன் பாண்டியன், செயலாளர் தேன்ராஜ், பொருளாளர் ரெங்கநாதன், துணைத் தலைவர்கள் ராமசாமி, நடராஜன், தணிக்கையாளர் ராகவன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் தர்மராஜ் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory