» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புதிய போக்குவரத்து காவல் மையம் : எஸ்.பி. சிவபிரசாத் தொடங்கி வைத்தார்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 12:46:56 PM (IST)

தூத்துக்குடியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்தைச் சீரமைக்கும் நோக்கில், குரூஸ் பர்னாந்து சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய மாநகரப் போக்குவரத்து காவல் மையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்தைச் சீரமைக்கக் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குரூஸ் பர்னாந்து சிலை அருகே புதிய போக்குவரத்து காவல் மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தூத்துக்குடி நகரக் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் தலைமை தாங்கினார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனை முருகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், புதிய போக்குவரத்து காவல் மையத்தைத் திறந்து வைத்துப் பேசினார். தொடர்ந்து, ஒலிபெருக்கி மூலமாகப் பொதுமக்களுக்குப் போக்குவரத்து விதிகள் குறித்தும், சாலைப் பாதுகாப்பு குறித்தும் அறிவுரைகளை வழங்கினார். மேலும், பணியில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்குத் தலைக்கவசங்களை வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் இயக்குநர் ஆனந்த், வட்டத் தெப்பம் வியாபாரிகள் சங்கத் தலைவர் சரவணமூர்த்தி, செயலாளர் ராஜேஷ், பொருளாளர் சரவணன், மத்திய வியாபாரிகள் சங்கப் பிரதிநிதி எம். உதயசூரியன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மக்களில் ஒருவன்Aug 10, 2026 - 07:12:07 PM | Posted IP 104.2*****
ஆட்டோகளில் முன்பக்கத்தில் பம்பர் மாட்டி அதில் அதிகமாக ஒலி மற்றும் ஒளி எழுப்ப கூடிய ஹார்ன் மற்றும் விளக்கு காது மற்றும் கண் பாதிக்கும் வகையில் பயன்படுத்தி வருகின்றனர்.இது போலிசாரின் கண்களுக்கு தெரிவதில்லை. தலை கவசம் மட்டும் தான் இவர்களின் கண்களுக்கு தெரியும்.
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)








BabuAug 11, 2026 - 06:25:01 PM | Posted IP 162.1*****