» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல்: 774 பேர் பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 12:35:59 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 223 பெண்கள் உள்பட 774 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதல், தேர்வு மோசடிகளைக் கண்டித்தும், வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கோரியும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு ஐ.என்.டி.யு.சி. மாநிலச் செயல் தலைவர் பி. கதிர்வேல் தலைமை தாங்கினார்.
இப்போராட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. சார்பில் ராஜகோபால், மைக்கேல் வி. ராயன், சந்திரசேகர் மற்றும் பாலராஜ், சி.ஐ.டி.யு. சார்பில் முன்னாள் துறைமுகக் குழு உறுப்பினர் ரசல், பாலசுப்பிரமணியன், சிவபெருமாள், எச்.எம்.எஸ். சார்பில் மாவட்டத் தலைவர் ராஜலட்சுமி, துணைத் தலைவர் ராதா ஆனந்தராஜ், ராஜேஷ், சாதிக், ஏ.ஐ.சி.சி.டி.யு. சார்பில் சகாயம், சிவராமன், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஞானசேகரன், மாநகராட்சி கவுன்சிலர் தனலட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முத்து உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு, நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து மத்திய பாகம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் இப்போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட மொத்தம் 79 பேரை கைது செய்து, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதுபோல் திருச்செந்தூரில் நடந்த மறியல் போராட்டத்தில் 80 பெண்கள் உட்பட 180 பேரும், கோவில்பட்டியில் 55 பெண்கள் உள்பட 120 பேரும், செய்துங்கநல்லூரில் 20 பெண்கள் உள்பட 31 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 40 பெண்கள் உட்பட 80 பேரும், விளாத்திகுளத்தில் 25 பெண்கள் உட்பட 60 பேரும் என மாவட்டம் முழுவதும் 223 பெண்கள் உள்பட மொத்தம் 774 பேர் கைது செய்யப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







