» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக்கில் வந்து ஆடு திருட்டு: சிசிடிவி காட்சி மூலம் இருவருக்குப் போலீசார் வலைவீச்சு!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:51:02 AM (IST)
தூத்துக்குடியில் பகல் நேரத்தில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பைக்கில் வந்து ஆட்டைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே, பகல் நேரத்தில் மேய்ச்சலுக்காக ஆடு ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த ஆட்டைத் தூக்கிக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர்.
அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பான காட்சிகள் பதிவாகியிருந்தன. இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையப் பகுதிப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆட்டைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







