» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கு: போலீசாருக்கு டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டு
சனி 18, ஜூலை 2026 3:53:20 PM (IST)
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் 8 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல் துறையினருக்கு நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டுத் தெரிவித்தார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கஞ்சா கடத்தல் வழக்கில், கடத்தலில் ஈடுபட்ட எதிரிகளைக் கைது செய்து அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புப் பிரிவினருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கில் துரிதமாகச் செயல்பட்ட தாளமுத்துநகர் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர்கள் டேவிட்ராஜன், சண்முகையா, சுடலைமணி, பொன்ராம் மற்றும் பொன்ராஜ் ஆகியோரைத் திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்துத் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான இத்தகைய துறைசார்ந்த நடவடிக்கைகள் மற்றும் குற்றத் தடுப்புப் பணிகளைத் தொடர்ந்து தொய்வின்றி மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)

சுதந்திர தினத்தில் சுடுகாட்டில் குடியேறி மக்கள் போராட்டம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:38:22 PM (IST)

சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. நற்சான்றிதழ்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:53:54 PM (IST)

தி பார்க் கிண்டர்கார்டனில் 80-வது சுதந்திர தின விழா!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:44:39 PM (IST)









