» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி : ஆணையர் ப்ரியங்கா துவக்கி வைத்தார்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:36:16 PM (IST)

தூத்துக்குடியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் விபரங்களைச் சுய கணக்கெடுப்பு முறையில் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் 2027 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதையொட்டி, (Self-Enumeration) பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட இப்பேரணியை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான சி.ப்ரியங்கா கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உதவியாட்சியர் (பயிற்சி), துணை ஆணையர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணியில் தூத்துக்குடிப் பகுதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பெருந்திரளாகப் பங்கேற்று, மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் மற்றும் அலைபேசி/இணையம் வழி சுய கணக்கெடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி பள்ளிக்கு ரூ.70 ஆயிரத்தில் புதிய இரும்பு வாயிற்கதவு: ரோட்டரி சங்கம் வழங்கல்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:40:41 AM (IST)

தூத்துக்குடியில் லோடுமேன் தூக்கிட்டுத் தற்கொலை : போலீசார் விசாரணை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:33:17 AM (IST)

தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு : கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:12:56 AM (IST)

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)









