» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் பொறுப்பேற்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:24:53 PM (IST)
சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குப் பொறுப்பு காவல் ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஸ்டீபன் ஜோஸ், நெல்லை மாவட்டத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனை அடுத்து காலியாக இருந்த பணியிடத்திற்கு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் பொறுப்பு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அவருக்குச் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள், காவல் துறையினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தங்களின் பிரச்சனைகள் குறித்து நேரடியாகப் புகார் அளிக்கலாம் என்றும், அதற்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதிய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரோச் பார்க் பகுதியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
சனி 25, ஜூலை 2026 9:33:13 PM (IST)

தூத்துக்குடியில் 'ஓ.எல்.எஸ் எக்ஸ்போ பொருட்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 9:27:40 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடி பவனி கோலாகலம்!
சனி 25, ஜூலை 2026 9:19:22 PM (IST)

பருவமழைக்கு முன் பாசனக் கால்வாய்கள், குளங்களை சீரமைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் பாஜக கோரிக்கை!
சனி 25, ஜூலை 2026 8:18:31 PM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
சனி 25, ஜூலை 2026 5:26:23 PM (IST)

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் குடும்பத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் தொலைபேசியில் ஆறுதல்!
சனி 25, ஜூலை 2026 4:40:37 PM (IST)








