» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் புதிய பேருந்து நிலைய விவகாரம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வெள்ளி 17, ஜூலை 2026 5:12:51 PM (IST)

திருச்செந்தூர் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் இடத்தை மாற்றிய விவகாரத்தில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ரூ.18.10 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காகத் தொடக்கத்தில் கீழத்திருச்செந்தூர் மாட்டுத்தாவணி பகுதியில் 1.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அதன் அருகே 6.5 ஏக்கர் காலியிடமும் இருந்தது. ஆனால், தற்போது இந்தத் திட்டம் மேலத்திருச்செந்தூர் குமாரபுரம் பகுதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றம் குறித்துப் பொதுமக்களிடம் எந்தவொரு கருத்து கேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை எனத் திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் (சென்னை உயர் நீதிமன்ற அமர்வு) மனுத் தாக்கல் செய்துள்ளார். மேலத்திருச்செந்தூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்தால், முருகன் கோயிலுக்கு வரும் பயணிகள் பல்வேறு நிர்வாகச் சிக்கல்களைச் சந்திப்பார்கள் என்றும், புதிய இடத்தில் போதிய நிலப்பரப்பு இல்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே, குமாரபுரம் பணிகளுக்குத் தடை விதித்து, கீழத்திருச்செந்தூர் மாட்டுத்தாவணியிலேயே பேருந்து நிலையத்தை அமைக்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இத்திட்டம் குறித்துத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து

அசுபதிராகவன் பிச்சிவிளைJul 19, 2026 - 04:39:53 PM | Posted IP 172.7*****

திருச்செந்தூர் மாட்டுதாவணியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைவதே பொது மக்களுக்கு வசதியாக இருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory