» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகன் இறந்த துக்கத்தில் தந்தை தீக்குளித்து தற்கொலை!
சனி 9, மே 2026 10:52:55 AM (IST)
முறப்பநாடு அருகே மகன் இறந்த துக்கம் தாளாமல் தந்தை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (82). இவர் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இவர்களது ஒரே மகனான சண்முகவேல், கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஒரே மகனை இழந்த துக்கத்தில் சுப்பிரமணியன் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
தன்னை கவனித்துக்கொள்ள யாரும் இல்லையே என்ற விரக்தியில் இருந்த சுப்பிரமணியன், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பலத்த தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியன், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஊழல் புகார் : தொ.மு.ச. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
சனி 9, மே 2026 3:31:35 PM (IST)

ராகுல் காந்திக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி ராஜினாமா அறிவிப்பு!
சனி 9, மே 2026 12:51:21 PM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி - அதிர்ச்சியில் நிலைதடுமாறி விழுந்த பெண்!
சனி 9, மே 2026 10:43:37 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!
சனி 9, மே 2026 8:58:07 AM (IST)

தூத்துக்குடியில் புரோட்டா சாப்பிட்ட சட்டக்கல்லூரி மாணவர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை!
சனி 9, மே 2026 8:53:06 AM (IST)

வாலிபருக்கு அரிவாள் வெட்டு: இருவர் கைது!
சனி 9, மே 2026 8:45:18 AM (IST)










