» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புரோட்டா சாப்பிட்ட சட்டக்கல்லூரி மாணவர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை!
சனி 9, மே 2026 8:53:06 AM (IST)
தூத்துக்குடியில் உணவகத்தில் புரோட்டா சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிய சட்டக்கல்லூரி மாணவர், மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் எஸ்.ஜே. ஜெகன் என்பவரது மகன் பிரபாகர் (23). இவர் தூத்துக்குடியில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் மாணவராகப் படித்து வந்தார். கடந்த 7-ம் தேதி இரவு, பிரபாகர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தூத்துக்குடியில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் புரோட்டா வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, இரவு வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார்.
நேற்று காலை நீண்ட நேரமாகியும் பிரபாகர் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், உள்ளே சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பிரபாகர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த வடபாகம் போலீசார், பிரபாகரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரபாகர் சாப்பிட்ட புரோட்டாவினால் ஏற்பட்ட உணவு நஞ்சாதல் காரணமாக உயிரிழந்தாரா? அல்லது அவருக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு அல்லது அலர்ஜி இருந்ததா? என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மாணவரின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சட்டக்கல்லூரி மாணவர் திடீரென உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஊழல் புகார் : தொ.மு.ச. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
சனி 9, மே 2026 3:31:35 PM (IST)

ராகுல் காந்திக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி ராஜினாமா அறிவிப்பு!
சனி 9, மே 2026 12:51:21 PM (IST)

மகன் இறந்த துக்கத்தில் தந்தை தீக்குளித்து தற்கொலை!
சனி 9, மே 2026 10:52:55 AM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி - அதிர்ச்சியில் நிலைதடுமாறி விழுந்த பெண்!
சனி 9, மே 2026 10:43:37 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!
சனி 9, மே 2026 8:58:07 AM (IST)

வாலிபருக்கு அரிவாள் வெட்டு: இருவர் கைது!
சனி 9, மே 2026 8:45:18 AM (IST)










