» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபருக்கு அரிவாள் வெட்டு: இருவர் கைது!
சனி 9, மே 2026 8:45:18 AM (IST)
கோவில்பட்டி அருகே முன் விரோதம் காரணமாக வாலிபரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (27). தொழிலாளியான இவருக்கும், பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த தியாகராஜன் மகன் தமிழ்செல்வம் (29) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்பகை இருந்து வந்துள்ளது.
நேற்று காலையில் வேல்முருகன் காந்திநகர் சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தமிழ்செல்வம் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் சேர்ந்து வேல்முருகனை வழிமறித்தனர். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த தமிழ்செல்வம் தான் வைத்திருந்த அரிவாளால் வேல்முருகனைச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த வேல்முருகன், சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த தமிழ்செல்வம் (29) மற்றும் அவருக்குத் துணையாக இருந்த நடராஜபுரம் செல்வராஜ் மகன் சுந்தரபாண்டியன் (32) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஊழல் புகார் : தொ.மு.ச. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
சனி 9, மே 2026 3:31:35 PM (IST)

ராகுல் காந்திக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி ராஜினாமா அறிவிப்பு!
சனி 9, மே 2026 12:51:21 PM (IST)

மகன் இறந்த துக்கத்தில் தந்தை தீக்குளித்து தற்கொலை!
சனி 9, மே 2026 10:52:55 AM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி - அதிர்ச்சியில் நிலைதடுமாறி விழுந்த பெண்!
சனி 9, மே 2026 10:43:37 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!
சனி 9, மே 2026 8:58:07 AM (IST)

தூத்துக்குடியில் புரோட்டா சாப்பிட்ட சட்டக்கல்லூரி மாணவர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை!
சனி 9, மே 2026 8:53:06 AM (IST)










