» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அமைச்சர் பொன்முடியை கைது செய்யக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 293 பேர் கைது

செவ்வாய் 15, ஏப்ரல் 2025 9:43:24 PM (IST)

நெல்லை டவுனில் அமைச்சர் பொன்முடியை கைது செய்யக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியைச் சேர்ந்த 68 பெண்கள் உட்பட 293 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்துக்கள் புனிதமாக அணியும் விபூதி பட்டை திருநாமத்தை இழிவுபடுத்தி  பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி விலக வலியுறுத்தியும், அவரை கைது செய்யக் கோரியும் நெல்லை மாநகரில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார்  தலைமையில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா, மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன் மாயகூத்தன் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் கிருஷ்ண பிரியா முத்துலட்சுமி, ஆனந்தகனி, வெள்ளத்தாய் ஜானகி சாந்தி கண்ணகி, கோட்டத் தலைவர் தங்க மனோகர் கோட்டச் செயலாளர்கள் ஆறுமுகசாமி, கண்ணன், பிரம்மநாயகம், தூத்துக்குடிக்கு மாவட்ட  நிர்வாகிகள்  இசக்கி, சரவணகுமார், நாராயணராஜ், முத்துக்குமார்,  ராமர், முருகன், ஆனந்த், ரவிச்சந்திரன், செந்தில், வெங்கடேஷ் விருதுநகர் மாவட்டம்  பிரபு, சஞ்சீவி, வினோத் வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில நிர்வாகி பந்தல் ராஜா,  உட்பட பலர் கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 68 பெண்கள் உட்பட 293பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education






New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory