» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கட்டாரிமங்கலம் ஸ்ரீஅழகிய கூத்தர் கோயிலில் திருவாசக முற்றோதுதல் வேள்வி!

வியாழன் 24, ஏப்ரல் 2025 8:56:22 PM (IST)

சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் ஸ்ரீஅழகிய கூத்தர் கோயிலில் திருவாசக முற்றோதுதல் வேள்வி இன்று நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தர் திருக்கோயிலில் திருநெல்வேலி சிவநெறி மணிவாசகர் அருட்பணி மன்றத்தினர் சார்பில் திருவாசக முற்றோதுதல் வேள்வி பூஜை இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. 

பூஜையை முன்னிட்டு காலை 9 மணிமுதல்திருநெல்வேலி சிவநெறி மணிவாசகர் அருட்பணி மன்றத்தினரின் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. 

பகல் 10. மணி முதல் அபிஷேகம் தொடங்கியது. பகல் 12.00 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பகல் 1.00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜ பிள்ளை தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory