» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு

வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2025-ம் ஆண்டிற்கான நேரடி காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிக்களுக்கான எழுத்து தேர்வு வருகின்ற 21.12.2025 ஞாயற்றுகிழமை அன்று காலை 10 மணிமுதல் 12.30 வரை முதன்மை தேர்வும், மதியம் 03.30 மணிமுதல் 05.10 மணி வரை தமிழ் மொழி தகுதி தேர்வும் நடைபெற உள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 1. பி.எம்.சி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி, 2. வஉசி கல்லூரி, 3. கிரேஸ் இஞ்சினியரிங் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் ஆண் விண்ணப்பதாரர்களும், 4. காமராஜ் கல்லூரி தேர்வு மையத்தில் பெண் விண்ணப்பதார்களும்; என மொத்தம்  5146 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்:
  • தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் கருப்பு நிற பந்து முனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • தேர்வுக்கூட (Hall Ticket) சீட்டுடன் கூடுதலாக விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையான ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலைக் கொண்டுவர வேண்டும்.
  • செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச், ப்ளுடூத் போன்ற எல்க்ட்ரானிக் கருவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது.
  • விண்ணப்பதாரர்கள் முதன்மை தேர்வுக்கு காலை 8 மணி முதல் 9.30 மணி வரையும், தமிழ் தகுதித் தேர்வுக்கு மதியம் 2 மணி முதல் 3 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் (Exam Hall) செல்ல அனுமதிக்கப்படுவர். 
  • மேலும் மேற்படி காலை நேரத்தில் தேர்வு மையத்திற்கு வந்த விண்ணப்பதார்கள் தமிழ் தகுதி தேர்வு முடியும் வரை தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது.
  • தேர்வர்கள் உணவு அருந்துவதற்காக மேற்படி 4 மையங்களிலும் உணவு ஸ்டால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு தேர்வர்கள் நேரடியாக பணம் கொடுத்து மட்டுமே மதிய உணவு வாங்கி கொள்ளலாம். 
  • Gpay, Phonepe போன்ற மொபைல் பண பரிவர்த்தனை செய்வதற்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. எனவே தேர்விற்கான விதிமுறைகளை விண்ணப்பதாரர்கள் கடைபிடித்து தேர்வு எழுதுமாறு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory