» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)



தூத்துக்குடி அய்யனடைப்பு கிராமத்தில் மரம் நடும் பசுமை விழா நடந்தது. 

விழாவிற்கு மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), திட்ட இயக்குநர் ஐஸ்வர்யா, வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அய்யனடைப்பு பகுதியை சுற்றி 56 மரங்கள் நடப்பட்டது. 

விழாவில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராம உதயம் கிளை அலுவலகம் ஆழ்வார்தோப்பு தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன், வனச்சரகர் பாபு, வன அலுவலர் ஜெயக்குமார், அய்யனடைப்பு கிராம உதவியாளர் சீனிவாசன், பசுமை தோழர் சந்தன சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வனத்துறை, கோத்தாரி இன்டஸ்ட்ரியல், எக்னோரா நிறுவனம் மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனத்தினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து

YobhurajFeb 26, 2026 - 01:15:46 PM | Posted IP 104.2*****

தூத்துக்குடியில் உப்பளங்கள் அருகில் பூந்தொட்டிகளில் மரம் வளர்க்கலாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory