» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வல்லநாடு தாமிரபரணி ஆற்றுபாலத்தில் மீண்டும் பள்ளம் : வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தல்
வியாழன் 24, ஏப்ரல் 2025 8:21:10 PM (IST)

தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை வல்லநாடு தாமிரபரணி ஆற்றுபாலத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி - நெல்லை இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள், கடந்த 2004ம் ஆண்டு தொடங்கியது. ரூ.234 கோடி மதிப்பீட்டில் நடந்த இந்த பணிகள், கால தாமதம் காரணமாக கூடுதலாக ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டு 2012ல் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தது. இந்த 4 வழிச்சாலையில் நெல்லை - தூத்துக்குடியை வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலம் இணைக்கிறது.
ஆனால் கட்டப்பட்ட 5 ஆண்டிற்குள் 2017ம் ஆண்டு பாவத்தின் நடுவே கான்கிரீட் பெயர்ந்து பெரிய ஓட்டை விழுந்தது. பாலத்தின் உறுதித் தன்மை குறித்த கேள்வி எழுந்ததையடுத்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் ஓட்டையில் கான்கிரீட் கலவை போடப்பட்டு போக்குவரத்து துவங்கியது. இதுபோல் பல முறை ஓட்டை விழுந்து பராமரிப்பு பணிகள் நடந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆற்றுபாலத்தில் 13 கோடி மதிப்பில் பராமரிப்பு பணி நடைபெற்றது. இதன் பின்னர் மீண்டும் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று போக்குவரத்து பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











ராமநாதபூபதிApr 26, 2025 - 10:01:27 AM | Posted IP 162.1*****