» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இரும்பு கடையில் திருடிய வாலிபர் கைது
வியாழன் 24, ஏப்ரல் 2025 9:21:56 PM (IST)
தூத்துக்குடியில் இரும்பு கடையில் மேற்கூரையை உடைத்து பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்தவர் சண்முகையா மகன் சுப்பையா (55). இவர் வஉசி மார்க்கெட்டில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 15ஆம் தேதி இரவு இவரது கடை மேற்கூரையை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று கல்லாவில் இருந்த ரூ.6 ஆயிரம் பணத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் சுப்பையா புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்து வீரப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக தூத்துக்குடி மேல சண்முகபுரம் பெருமாள் தெருவை சேர்ந்த சேர்மராஜா மகன் சரவணகுமார் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி உட்பட பல காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










