» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இரும்பு கடையில் திருடிய வாலிபர் கைது

வியாழன் 24, ஏப்ரல் 2025 9:21:56 PM (IST)

தூத்துக்குடியில் இரும்பு கடையில் மேற்கூரையை உடைத்து பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்தவர் சண்முகையா மகன் சுப்பையா (55). இவர் வஉசி மார்க்கெட்டில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 15ஆம் தேதி இரவு இவரது கடை மேற்கூரையை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று கல்லாவில் இருந்த ரூ.6 ஆயிரம் பணத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் சுப்பையா புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்து வீரப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக தூத்துக்குடி மேல சண்முகபுரம் பெருமாள் தெருவை சேர்ந்த சேர்மராஜா மகன் சரவணகுமார் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி உட்பட பல காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory