» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

படியில் தவறி விழுந்து பர்னிச்சர் கடை அதிபர் சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்!

வியாழன் 24, ஏப்ரல் 2025 9:07:40 PM (IST)

தூத்துக்குடியில் படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்து பர்னிச்சர் கடை அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி பூபால்ராயர் புரத்தைச் சேர்ந்தவர் கல்யாணி மகன் செல்வராஜ் (45) இவர் ரகுமத்துல்லா புரத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இன்று மாலை கடைக்கு வந்தவர் படிக்கட்டில் ஏறும்போது திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory