» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருவிக நகர் சக்திபீடத்தில் தமிழ் புத்தாண்டு விழா: ஆன்மிக இயக்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!
திங்கள் 14, ஏப்ரல் 2025 3:34:24 PM (IST)

தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி விவசாயம் செழிக்க சிறப்பு வழிபாடு மற்றும் ஆன்மிக இயக்கம் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் அருளாசியுடன் தூத்துக்குடி 3வது மைல் அருகே உள்ள திருவிக நகர் சக்திபீடத்தில் தமிழ் புத்தாண்டு விசுவாவசு விழாவையொட்டி விவசாயம் செழிக்கவும், மழை வளம் வேண்டியும், இயற்கை சீற்றம் தணியவும், மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அன்னை ஆதிபராசக்திக்கு கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு படிக்காசு வழங்கும் நிகழ்ச்சியை கூட்டுறவு பண்டக சாலை பொதுமேலாளர் கந்தசாமி தொடங்கி வைத்தார். அன்னதானம் நிகழ்சியை எட்டையாபுரம் மன்ற பொறுப்பாளர் ராதிகா தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து தூத்துக்குடியில் ஆன்மிக இயக்கம் சார்பில் 2 இடங்களில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. மகளிர் அணி பொறுப்பாளர் யசோதா முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி.ஆர்.முருகன் திறந்து வைத்து நீர், மோர், தர்பூசனி மற்றும் பழங்கள் ஆகியவற்றை வழங்கினார். விழாவில், சித்த மருத்துவர் வேம்புகிருஷ்ணன், சிதம்பரநகர் மன்றம் கணேசன், துறைமுகம் பாண்டி, திருவிக நகர் சக்திபீட நிர்வாகிகள் திருஞானம், பத்மா, அனிதா, புதுக்கோட்டை பரமேஸ்வரி, அகிலா, முத்துலெட்சுமி, புவனேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வல்லநாடு தாமிரபரணி ஆற்றுபாலத்தில் மீண்டும் பள்ளம் : வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தல்
வியாழன் 24, ஏப்ரல் 2025 8:21:10 PM (IST)

சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை
வியாழன் 24, ஏப்ரல் 2025 8:11:09 PM (IST)

காஷ்மீர் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உருவப் பொம்மை எரிப்பு: காங்கிரஸ் கட்சியினர் ஆவேசம்
வியாழன் 24, ஏப்ரல் 2025 8:06:30 PM (IST)

வீடு, இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி: அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை பரபரப்பு புகார்
வியாழன் 24, ஏப்ரல் 2025 7:57:14 PM (IST)

தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை!
வியாழன் 24, ஏப்ரல் 2025 3:46:28 PM (IST)

தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப்பணியாளர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.இளம்பகவத் துவக்கி வைத்தார்
வியாழன் 24, ஏப்ரல் 2025 3:32:51 PM (IST)
