» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுவனை கொலை செய்தவருக்கு வாழ்நாள் சிறை : தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு

திங்கள் 7, ஏப்ரல் 2025 8:22:56 AM (IST)

6 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வடக்கு முத்தலாபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அருண்ராஜ் (31). இவா், கடந்த 2019இல் எட்டயபுரம் காவல் சரகப் பகுதியில் 6 வயது சிறுவனை பாலியல் வன்புணா்ச்சி செய்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பான புகாரின்பேரில், போக்ஸோ சட்டம், கொலை வழக்கு, வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவா் எட்டயுபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ் விசாரித்து அருண்ராஜுக்கு கொலை, வன்கொடுமை குற்றங்களுக்காக தனித்தனி ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம், சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 அபராதம் ஆகிய தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துலட்சுமி ஆஜரானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors





CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory