» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் ரகளை: 4பேர் கைது
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:17:54 PM (IST)
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது டேவிஸ் புரம் ரோட்டில் கையில் ஆயுதங்களுடன் 4பேர் கொண்ட கும்பல் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த போலீசார் 4 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தாளமுத்து நகர் சுனாமி காலனி ராமதாஸ் நகரை சேர்ந்த ராஜா மகன் ஜெகன் (20), மகேந்திரன் மகன் சஞ்சய் (20), வண்ணாரப் பேட்டை முருகன் மகன் மாரி செல்வம் (19), மாப்பிள்ளையூரணி திருவள்ளுவர் நகர் செட்டி பெருமாள் மகன் சரவணகுமார் (21) என்பது தெரியவந்தது. இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து 4பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து 4 அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
வியாழன் 17, ஏப்ரல் 2025 9:51:22 PM (IST)

தூத்துக்குடி அருகே விஷ வண்டுகள் தீ வைத்து அழிப்பு : தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு
வியாழன் 17, ஏப்ரல் 2025 9:28:52 PM (IST)

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பதற்கான மகளிர் உதவி எண்.181 தொடர்புக் கொள்ளலாம்
வியாழன் 17, ஏப்ரல் 2025 9:23:51 PM (IST)

சிங்கி இறால் கொழுக்க வைத்தல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி: மீன்வளக் கல்லூரி அழைப்பு
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:03:29 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சுற்று நீதிமன்றம்: ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
வியாழன் 17, ஏப்ரல் 2025 4:34:08 PM (IST)

தூத்துக்குடி கடல் பகுதியில் மிதக்கும் ஹோட்டல் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
வியாழன் 17, ஏப்ரல் 2025 12:53:13 PM (IST)

மக்கள்Apr 13, 2025 - 06:15:28 PM | Posted IP 104.2*****