» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே விஷ வண்டுகள் தீ வைத்து அழிப்பு : தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு
வியாழன் 17, ஏப்ரல் 2025 9:28:52 PM (IST)

தூத்துக்குடி அருகே வீட்டில் கூடு கட்டியிருந்த விஷ கடந்தை வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் தீவைத்து அழித்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள மேலத்தட்டப்பாறை கிராமம் ரயில் நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவரது மண் சுவர் வீட்டில் கடந்த 3 வாரமாக விஷ கடந்தை வண்டுகள் கூடு கட்டி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த கூண்டில் சுமார் 1000க்கும் மேற்பட்ட விஷ வண்டுகள் இருந்துள்ளது. இது குறித்து உடனடியாக ஓட்டப்பிடாரம் தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அவரது வீட்டுக்கு சென்றனர் அங்கு தீயணைப்பு வீரர்கள் உடல் கவசம் உடைகள் அணிந்து தீ வைத்து விஷ வண்டுகளை அழித்தனர். சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் விஷ வண்டுகள் அனைத்தும் இறந்தது. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு விஷ வண்டுகளை அழித்ததால் அந்தப் பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களை பாராட்டினார்கள்.
இதுகுறித்து தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன் கூறும்போது இந்த வண்டுகள் அனைத்தும் விஷத்தன்மை உள்ளது. இந்த வண்டுகள் குறிப்பிட்ட இடங்களில் கூடுகட்டி முட்டைகள் இடும். தற்போது இங்கு இருந்த கூடுகளில் சுமார் 700 க்கும் மேற்பட்ட முட்டைகள் இருந்தனர். மேலும் 1000க்கும் மேற்பட்ட விஷ வண்டுகள் இருந்தனர் இதை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு முழுமையாக அளித்தனர் என்று கூறினார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










