» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே விஷ வண்டுகள் தீ வைத்து அழிப்பு : தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு

வியாழன் 17, ஏப்ரல் 2025 9:28:52 PM (IST)



தூத்துக்குடி அருகே வீட்டில் கூடு கட்டியிருந்த விஷ கடந்தை வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் தீவைத்து அழித்தனர். 

தூத்துக்குடி அருகே உள்ள மேலத்தட்டப்பாறை கிராமம் ரயில் நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவரது மண் சுவர் வீட்டில் கடந்த 3 வாரமாக விஷ கடந்தை வண்டுகள் கூடு கட்டி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த கூண்டில் சுமார் 1000க்கும் மேற்பட்ட விஷ வண்டுகள் இருந்துள்ளது. இது குறித்து உடனடியாக ஓட்டப்பிடாரம் தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அவரது வீட்டுக்கு சென்றனர் அங்கு தீயணைப்பு வீரர்கள் உடல் கவசம் உடைகள் அணிந்து தீ வைத்து விஷ வண்டுகளை அழித்தனர். சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் விஷ வண்டுகள் அனைத்தும் இறந்தது. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு விஷ வண்டுகளை அழித்ததால் அந்தப் பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களை பாராட்டினார்கள்.

இதுகுறித்து தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன் கூறும்போது இந்த வண்டுகள் அனைத்தும் விஷத்தன்மை உள்ளது. இந்த வண்டுகள் குறிப்பிட்ட இடங்களில் கூடுகட்டி முட்டைகள் இடும். தற்போது இங்கு இருந்த கூடுகளில் சுமார் 700 க்கும் மேற்பட்ட முட்டைகள் இருந்தனர். மேலும் 1000க்கும் மேற்பட்ட விஷ வண்டுகள் இருந்தனர் இதை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு முழுமையாக அளித்தனர் என்று கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory