» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிங்கி இறால் கொழுக்க வைத்தல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி: மீன்வளக் கல்லூரி அழைப்பு

வியாழன் 17, ஏப்ரல் 2025 5:03:29 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் சிங்கி இறால் கொழுக்க வைத்தல் தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் பயிற்சி வருகிற 24ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக மீன்வளக்கல்லூரி மற்றும ஆராய்ச்சி; நிலையத்தின் முதல்வர் ப.அகிலன் வெளியிட்ட செய்திக்குறிப்பு தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக விளங்கும் மீன்வளக்கல்லூரி மற்றும ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி, தருவைக்குளம், தூத்துக்குடியில் வருகின்ற 24.04.2025 அன்று "சிங்கி இறால் கொழுக்க வைத்தல் தொழில்நுட்பம” குறித்த ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதில் சிங்கி இறால் கொழுக்க வைத்தல் தொழில்நுட்பம் குறித்த வகுப்பு மற்றும் செயல்சார் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அனைவரும் ரூ.300ஃ- செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியின் முடிவில் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 5.00 மணிக்குள் தங்களது பெயரை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்;. பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.

உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர் (பொ)
கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி
மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தூத்துக்குடி - 628 008

தொலைபேசி எண்: 0461-2277424, அலைபேசி எண்: 9994450248


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory