» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையில் நடந்து சென்றபோது கார் மோதி வாலிபர் பலி

ஞாயிறு 13, ஏப்ரல் 2025 9:18:00 AM (IST)

செய்துங்கநல்லூரில் சாலையில் நடந்து சென்றபோது கார் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் சந்தையடியூர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் முத்து பெருமாள் (32). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் பங்குனி உத்திர திருவிழாவிற்காக செய்துங்கநல்லூரில் உள்ள சுந்தரபாண்டிய சாஸ்தா கோவிலுக்கு குடும்பத்துடன் முத்துபெருமாள் சென்றார். 

இரவில் கோவிலில் இருந்து முத்துபெருமாள் மட்டும் ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரயில்வே கேட் அருகில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று முத்துபெருமாள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த முத்துபெருமாளை மீட்டு சிகிச்சைக்காக பாளை., அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory