» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இடி மின்னலுடன் திடீர் மழை : மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழப்பு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:10:39 PM (IST)

தூத்துக்குடியில் இடி மி்ன்னலுடன் கனமழை பெய்தது. மேலும், மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழந்தது.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, தூத்துக்குடி மாநகரில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாலை 6 மணியளவில் மாநகா் பகுதி முழுவதும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதி, சாலைகளில் மழை நீர் தேங்கியது. இந்நிலையில், தட்டாபாறை எஸ்எஸ் காலனியைச் சேர்ந்த பரமசிவம் மகன் முத்து என்பவரது பசு மாடு மின்னல் தாக்கியதில் உயிரிழந்தது. மேலும் மாநகரின் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










