» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!

ஞாயிறு 6, ஏப்ரல் 2025 5:51:30 PM (IST)

தூத்துக்குடி அருகே பழைய வீட்டை இடிக்கும் போது சுவர் இடிந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் முத்து கருப்பசாமி (42), இவர் தற்போது விளாத்திகுளம் அருகே உள்ள பெருமாள் பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இவரும் புதியம்புத்தூர் சுந்தரலிங்க நகரை சேர்ந்த பிச்சையா மகன் நாராயணன் (35) ஆகிய 2 பேரும் இன்று சுந்தர லிங்கம் நகரில் உள்ள ஒரு பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் .

அப்போது திடீரென அந்த வீட்டின் மேல் சுவர் இடிந்து விழுந்ததில் இருவரும் இடுபாடுக்குள் சிக்கினர். அக்கம் பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டனர். இதில் முத்துக் கருப்பசாமி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த நாராயணன் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) சைரஸ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital




New Shape Tailors

CSC Computer Education





Thoothukudi Business Directory