» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்!

ஞாயிறு 6, ஏப்ரல் 2025 10:30:41 AM (IST)



வக்பு சட்ட திருத்தத்தை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி திருச்செந்தூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மத நல்லிணக்கத்திற்கும், சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வக்ப் சட்ட திருத்தத்தினை முழுமையாக திரும்ப பெற மத்திய அரசினை வலியுறுத்தி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரைட்டர் தலைமை தாங்கினார்.  மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்த், மாவட்ட துணைசெயலாளர்கள் சிவனேஸ்வரன், முத்துக்கனி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் அஸ்கர், திருச்செந்தூர் நகர செயலாளர் முருகானந்தம் , உடன்குடி ஒன்றிய செயலாளர் பிரசாத், திருச்செந்தூர் குட்டி, ஆழ்வை ஒன்றியம் குட்டி ராஜா, ஆறுமுகநேரி நகர செயலாளர் நிவாஸ் கண்ணன் , காயல்பட்டினம் நகர செயலாளர் ஹனிபா, புன்னைக்காயல் சேவியர், வீரபாண்டியன்பட்டிணம் சர்க்கார் மதன், அமலிநகர் விவேக், வழக்கறிஞர் அணி ராஜிவ் காந்தி, உடன்குடி  ஹசன், மகளிரணி விபினா, ஆனந்தி, பிளெஸ்ஸி, அபர்ணா மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட, திருச்செந்தூர் சட்டமன்ற, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் சுமார் 400 பேருக்கும் மேல் திரளாக கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







New Shape Tailors

CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory