» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நேர்மையான எஸ்.ஐ.யை மாற்ற கூடாது : பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம்!

சனி 5, ஏப்ரல் 2025 3:17:31 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் உதவி ஆய்வாளர் முத்தமிழரசனை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என பாஜக உறுப்பினர் காசிலிங்கம் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்துள்ள மனுவில், "கடந்த சில நாட்களாக நேர்மையான காவல்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தூத்துக்குடி மாநகரத்தில் சில போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தெற்கு காவல் நிலையத்தில் உண்மையாக பொதுமக்களுக்காக சேவையாகவும் உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் அவர்கள் செயல்பட்டு வந்தார்கள்.

சில அரசியல்வாதிகளால் தவறான தொழில் செய்யும் நபர்களால் நேர்மையான காவல் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்கிறார்கள். இந்த காவல்துறை அதிகாரிகளால் பொதுமக்கள் இளம்பெண்கள் இளைஞர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். தயவு செய்து மீண்டும் உதவி ஆய்வாளர் முத்தமிழரசனை மீண்டும் தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரிய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital



New Shape Tailors





Thoothukudi Business Directory