» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி!

செவ்வாய் 8, ஏப்ரல் 2025 10:23:50 AM (IST)

தூத்துக்குடியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்துக்குள்ளாகி வாலிபர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி கிரேஸ்வரம் மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்தவர் திருமுருகன் மலைச்சாமி மகன் பாலமுருகன் (38), மீனவர் ஆன இவர் தூத்துக்குடி புதிய துறைமுகம் மதுரை பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது குறுக்கே வந்த ஒரு மாடு இவரது பைக் மீது மோதியது.

இதில் பைக் நிலை தடுமாறி படுகாயம் அடைந்த பால முருகனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக நேற்று இரவு இறந்தார். இந்த சம்பவம் குறித்து  தெர்மல்நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory