» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:44:24 AM (IST)



வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

முஸ்லிம்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டதாக வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி மையம் மாவட்ட செயலாளர் கணேசன், வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல்  ஆகியோர் தலைமை வகித்தனர். விசிக மேலிடப் பொறுப்பாளர் கலைவேந்தன் கண்டன உரையாற்றினார். மண்டல செயலாளர் முரசு தமிழப்பன் ஒருங்கிணைத்தார். இதில் விசிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory