» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய இம்மானுவேல் ஆலயத்தில் பெண்கள் பண்டிகை!

செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:35:04 AM (IST)



ஜெபஞானபுரம் தூய இம்மானுவேல் ஆலயத்தில்  சேகர பெண்கள் பண்டிகை நடைபெற்றது. 

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் தங்கம்மாள்புரம் சேகரத்தை சார்ந்த ஜெபஞானபுரம் சபை தூய இம்மானுவேல் ஆலயத்தில் வைத்து 2025 ஆம் ஆண்டிற்கான சேகர பெண்கள் பண்டிகை நடைபெற்றது. காலை 8 மணிக்கு திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. பேருரணி சேகர ஆயர் ஆமோஸ் திருவிருந்து மற்றும் பண்டிகை ஆராதனையை நடத்தி தேவ செய்தி அளித்தார்.

பின் தங்கம்மாள்புரம் சேகரத்தைச்சார்ந்த தங்கம்மாள்புரம் ஜெபஞானபுரம், மாயகூத்தபுரத்தை சார்ந்த தாய்மார்கள் பவனி ஊர்வலமாக சென்றனர். இந்த பெண்கள் பண்டிகை சிறப்பு குடுகையில் .சசிலதா அகஸ்டின் கோயில் ராஜ் கலந்து கொண்டு தேவசெய்தி அளித்து மற்றும் ஆலோசனைகளை அளித்தார். சபை சார்பில் சிறப்பு பாடல்களை பெண்கள் பாடினர். 

இந்நிகழ்வில் வேதாகம தேர்வு மற்றும் போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வை சாயர்புரம் GUபோப் சபை மன்ற தலைவர் மற்றும் தங்கம்மாள்புரம் சேகர பொறுப்பு ஆயர் அகஸ்டின் கோயில் ராஜ் ஏற்பாடு செய்தார். சபை ஊழியர் சம்பத் மற்றும் ஜெபஞானபுரம் சபையார் உற்சாகமாக பங்குபெற்றார்கள். ஜெபஞானபுரம் தாய்மார்கள் இந்த நிகழ்வை நடத்தினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory