» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அடகு நகையை திருப்புவதில் பிரச்சனை: இளம்பெண் தற்கொலை!
சனி 5, ஏப்ரல் 2025 8:31:32 AM (IST)
ஓட்டப்பிடாரம் அருகே அடகு வைத்த நகையை திருப்பித்தர கணவர் மறுத்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் நீரவிமேடு தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் சுந்தர்ராஜ் (42). தச்சு தொழிலாளி. இவரது முதல் மனைவி மாரியம்மாள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பிரசவத்தின் போது இறந்துவிட்டார். ஆனால் குழந்தையை மட்டும் டாக்டர்கள் காப்பாற்றி விட்டனர். அந்த குழந்தையுடன் 2-வதாக அதே ஊரைச் சேர்ந்த மகேஸ்வரி (32) என்பவரை சுந்தரராஜ் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், மகேஸ்வரியின் நகையை சுந்தரராஜ் அடகு வைத்து பணம் வாங்கியுள்ளார். மேலும் அந்த நகையை அவர் திருப்பித்தராமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அந்த நகையை திருப்பித் தருமாறு கணவரிடம் மகேஸ்வரி கூறியுள்ளார். நகையை சுந்தரராஜ் திருப்பித்தராமல் இருந்ததால், இருவருக்கும் இடையே தினமும் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் மாலையில் வழக்கம் போல் அடகுநகையை திருப்பித் தருமாறு கணவரிடம் மகேஸ்வரி கேட்டுள்ளார். இதில் 2பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சுந்தரராஜ் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டாராம். இரவில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டிற்குள் சேலையால் மகேஸ்வரி தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மகேஸ்வரி இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அடகு நகையை கணவர் திருப்பித்தராத பிரச்சினையில் மனமுடைந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராமசாமிபுரம் நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நிற்க நடவடிக்கை: ஆட்சியரிடம் சமக கோரிக்கை!
திங்கள் 7, ஏப்ரல் 2025 9:25:32 PM (IST)

ஹோட்டல் கழிவு நீர் தொட்டியில் விழுந்த குழந்தை : தூத்துக்குடியில் பரபரப்பு!
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:44:29 PM (IST)

மகாவீர் ஜெயந்தி விழா: ஏப்.10ல் டாஸ்மாக் கடகளை மூட ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:33:52 PM (IST)

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:26:59 PM (IST)

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:51:23 PM (IST)

மீன், இறால் நோய்களைக் கண்டறிதல் பயிற்சி : தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி அழைப்பு!
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:47:05 PM (IST)
