» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புனிதவௌ்ளியன்று மதுக்கடைகளை மூட கோரிக்கை : மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

சனி 5, ஏப்ரல் 2025 8:26:10 AM (IST)



புனிதவெள்ளியன்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தி புன்னக்காயல் கிராமத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் கிராமத்தில் பாதிரியார் இல்லம் முன்பு நேற்று காலையில் ஊர் கமிட்டி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. ஊர்கமிட்டி தலைவர் குழந்தைமச்சாது தலைமை தாங்கினார். பங்கு தந்தை அந்தோணி சகாய டைட்டஸ் அடிகளார், துணை பங்கு தந்தை விவேக் சந்திரா அடிகளார், மற்றும் தூத்துக்குடி நெல்லை, குமரி மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் மதுவிலக்கு சபை இயக்குனர் ஜெயந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தில் வரும் புனித வெள்ளி அன்று மதுபான கடைகளை மூட வேண்டும், தமிழகத்தில் படிப்படியாக மதுபான கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், புனிதவெள்ளியன்று மதுக்கடைகளை மூடவேண்டிய அவசியம் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. இதில், மீனவர்கள் குடும்பத்தினருடன் திரளாக கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education



New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory