» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காணாமல் போன மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்பு : போலீசார் விசாரணை

சனி 5, ஏப்ரல் 2025 8:01:44 AM (IST)

கோவில்பட்டி அருகே காணாமல் போன மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தோனுகால் கிராமம் முதல் தெருவை சோ்ந்தவா் சுந்தரராஜ் மனைவி ருக்மணி அம்மாள் (78). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். நேற்று முன்தினம் அவரை கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தேடியபோது, அவரை காணவில்லையாம். இதையடுத்து, அவா் கோயம்புத்தூரில் உள்ள மகன் சுரேஷுக்கு தகவல் தெரிவித்தாராம். 

இந்நிலையில் நேற்று ஊருக்கு வந்த சுரேஷ், தாயை தேடியபோது படா்ந்தபுளியில் உறவினா் தோட்டத்தில் உள்ள கிணற்றில் ருக்மணி அம்மாள் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors



CSC Computer Education



Thoothukudi Business Directory