» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி விடுமுறை நாட்களிலும் குழந்தைகளை பணியில் அமர்த்தக் கூடாது : ஆட்சியர் எச்சரிக்கை!

வெள்ளி 4, ஏப்ரல் 2025 4:39:40 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி விடுமுறை நாட்களிலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளரை பணிக்கு அமர்த்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை 2025-க்குள் மாற்ற வேண்டுமென்ற இலக்கின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைத் தொழிலாளர் தடுப்பு படை ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்கள், கட்டுமானப் பணியிடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் காண வாய்ப்புள்ள அனைத்துத் தொழிற்கூடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மாவட்ட தடுப்புப் படை, பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், அரசுத் துறை அலுவலர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. 

2024 மற்றும் 2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986-ன்கீழ், மாவட்ட தடுப்புப் படையுடன் கூட்டாய்வுகள் மற்றும் இதர புகார்களின் அடிப்படையில் கடைகள் நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 03 குழந்தைத் தொழிலாளர்கள், 07 வளரிளம் பருவத் தொழிலாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை பணிக்கு அமர்த்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய வேலையளிப்பவர்கள் மீது காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்தவிதமான பணியிலும், 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியிலமர்த்தக் கூடாது. குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் ரூ.50,000/- வரை அபராதமோ 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமே சேர்த்தோ விதிக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்களை எவரேனும் பணியமர்த்தியிருந்தால் அது குறித்த விவரத்தினை குழந்தைப் பாதுகாப்பு உதவி எண் 1098 என்ற எண்ணிற்கு அழைக்குமாறும் அல்லது மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்திற்கு 0461-2340443 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பள்ளி விடுமுறை நாட்களிலும் குழந்தைத் தொழிலாளரை பணிக்கு அமர்த்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory