» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஞ்சா செடி வளர்ப்பு: வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:26:20 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்பட்ட சம்பவத்தில் வீட்டு உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் ஆவுடையார்புரம் பகுதி அமைந்து உள்ளது. அதன் பின்னால் உள்ள ஒரு வீட்டில் பல மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு இருந்தன. அதன் நடுவே சுமார் 8 அடி உயர கஞ்சா செடி செழித்து வளர்ந்து நின்றது. இதனை அங்கு சென்ற சிலர் பார்த்து உள்ளனர். அந்த செடி கஞ்சா செடி போன்று இருப்பதாக, மத்தியபாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.

அதன்பேரில் மத்தியபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அந்த செடியை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த செடி கஞ்சா செடி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கஞ்சா செடியை வேரோடு பிடுங்கி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் போலீசார் வீட்டில் இருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் அன்புராஜ் என்பவர் மீது மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital







New Shape Tailors

CSC Computer Education



Thoothukudi Business Directory